4. ஊர்காண் காதை

25

கவுந்தி கூறுங் காதலி தன்னொடு
தவந்தீர் மருங்கின் தனித்துய ருழந்தோய



25
உரை
26

       கவுந்தி கூறும் : கவுந்தியடிகள் கூறுவார் : காதலி தன்னொடு தவந் தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய் - காதலை யுடைய மனைவியோடு அறவினை ஒழிந்த பக்கத்தானே தனித்துத் துயரினை உழந்தோய் ;

       தீர்தல் - ஒழிதல். 1"தவந்தீர் மருங்கிற் றனித்துய ருழந்தேன்" என்றார் பிறரும். தவந்தீர் மருங்கில் என்றது முன்பு நல்வினை செய்த நீ சிறிது தீவினையும் செய்தமையானே என்றபடி. தனித் துயர் - ஒப்பற்ற துயருமாம். உழத்தல் - நுகர்தல்.

1 மணி, 14 : 89.