|
|
ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக்
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்
|
|
ஒய்யா
வினைப்பயன் உண்ணுங்காலை - போக்கவொண்ணாத தீவினையின் பயனாகிய துன்பத்தினை நுகருங்காலத்து,
கை யாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் - அறநூல்களைக் கற்றுணர்ந்த அறிஞர் செயலறவினைக்
கொள்ளார் ;
ஒய்யாமை - போக்கவொண்ணாமை. தாமே முன் செய்து
கொண்டமையானும் ஊட்டாது கழியாமையானும் இயைந்து நுகர்தற்பால தெனக் கொள்ளுவரென்றதாம்.
இனி, முன்னர் 'வல்வினை யூட்டும்' எனக் கூறியதனை மேற்கோள் காட்டி வலியுறுத்துகின்றார்.
|
|