7. ஆய்ச்சியர் குரவை

6

தையல் கலையும் வளையும் இழந்தே
கையி லொளித்தாள் முகமென் கோயாம்
கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி
மைய லுழந்தாள் வடிவென் கோயாம் ;


6
உரை
6

          "தையல் கலையும் . . . . யாம்" தையல் க லையும் வளையும் இழந்தே கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம் - கலையையும் வளையையும் இழந்து நாணினாலே தன் கையில் மறைந்தாளாகிய தையலின் முகத்தினழகையே யாம் புகழ்ந்து கூறுவேமோ, கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி மையல் உழந்தான் வடிவு என்கோ யாம் - அன்றி, அவ்வாறு கையிலே மறைந்தாளுடைய முகத்தின் தன்மை கண்டு இரங்கி மயக்க முழந்தானது வடிவழகினையே புகழ்ந்து கூறுவேமோ ;

        கலை - ஆடை. இனி, கையிலொளித்தாள் என்பதற்குக் கலையை இழந்தமையால் கையால் மறைத்தாள் எனினுமமையும் ; இதற்கு இல் மூன்றனுருபாகும்.

       இவை குரவை மகளிர் கூற்று.