4. ஊர்காண் காதை

தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோ னென்பது
நீயறிந் திலையா நெடுமொழி யன்றோ



46
உரை
49

       ஆதலின் - ஆகையான், தாதை ஏவலின் - தந்தையின் ஏவலால், மாதுடன் போகி - தன் மனைவியோடும் கானம் சென்று, காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் - அம் மனைவி பிரிதலானே மிக்க துயரத்தினை நுகர்ந்தோன், வேத முதல்வற் பயந்தோன் என்பது - வேதத்தை அருளிய நான்முகனைப் பெற்ற திருமால் என்பதனை, நீ அறிந்திலையோ - நீ அறியாயோ, நெடு மொழி அன்றோ - அது யாவரும் அறியும் வண்ணம் பரந்து பட்ட சொல்லன்றோ ;

       தாதை - தயரதன். 'நீ அறிந்திலையோ' என்றது அறிந்து வைத்தும் இரங்குதல் அறிவுடைமையாகாது என்பதாம்.