|
120
125 |
கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க
என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
ஒசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள
|
|
கன்று
அமர் ஆயமொடு களிற்றினம் நடுங்க - கன்றுகள் விரும்பிய பிடியின் கூட்டத்தோடு அவற்றைப்
புரக்கும் களிற்றினமும் நடுங்கும்படி, என்றூழ் நின்ற குன்று கெழு நன் னாட்டு - வெயில்
நிலைபெற்ற நல்ல மலைசார்ந்த நாட்டின், காடு தீப்பிறப்பக் கனை எரி பொத்தி - காடுமுழுதும்
தீயுண்டாக முழங்கும் அழலை மூட்டி, கோடையொடு புகுந்து - மேல் காற்றோடு வந்து புகுந்து,
கூடல் ஆண்ட வேனில் வேந்தன் - கூடலை ஆட்சி செய்த வேனிலாகிய அரசன், வேற்றுப்புலம்
படர ஓசனிக்கின்ற - வேற்றுப் புலங்கட்குச் செல்லுமாறு முயல் கின்ற, உறுவெயில் கடைநாள்
- மிக்க வெயிலையுடைய வேனிலின் கடை நாளில்;
என்றூழ் நீடிய என்பதும், பொத்திய
என்பதும் அரும்பதவுரை யாசிரியர் கொண்ட பாடம். கனை - செறிவுமாம். பொத்தி - மூட்டி.
ஓசனித்தல் - போதற்கு ஒருப்பட்டு முயலுதல் ; "1உடைதிரை
முத்தஞ் சிந்த வோசனிக் கின்ற வன்னம்'' என்பது காண்க. அவ்விடத்திருந்தும் அகல வென்பார்
'வேற்றுப் புலம்படர' என்றார்; "ஓரோர் தேயங்கட்கு ஓரொரு காலம் மாறி நிகழ்தலின்
வேற்றுப் புலம் படர வென்றார்" என்னும் அடியார்க்கு நல்லாருரை தமிழ் கூறு நல்லுலகத்திற்குப்
பொருந்துவதன்று. |
1
சீவக, 2652.
|
|