|
160 |
நால்வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு
|
|
நால்வேறு
வகையின் நயத்தகு மரபின் - நால்வகை யோடுங் கூடி யாவரும் விரும்பத்தக்க முறைமையினால்,
எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு - ஆயிரத்தெட்டு என்னும் எண்ணினையுடைய கழஞ்சினை,
முட்டா வைகல் முறைமையின் வழா - நாடோறும் முட்டாது பெறும் முறைமையினின்றும் வழுவாத,
தாக்கணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு - தீண்டி வருத்தும் அணங்கு போல்வாருடைய
கண்ணாகிய வலையிலகப்பட்டு;
எட்டினைக் கடையில் நிறுத்த
ஆயிரம் - ஆயிரத்தெட்டு ; ஆயிரத்து எண் கழஞ்சு ; ஆயிரமாகிய எண்ணினையுடைய கழஞ்சு;
ஆயிரக் கழஞ்சு என்பதூஉம் பாடம் ; ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் பெறுதலை, 1"விதிமுறைக்
கொள்கையி னாயிரத் தெண்கழஞ் சொருமுறையாகப் பெற்றனள்" என்பதனானும் அறிக. ஆங்கு,
அசை; பட்ட அப்பொழுதே யென்றுமாம். |
1
சிலப், 3 : 162-3.
|
|