|
185 |
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும
|
|
ஏகையும்
மாலையும் இருளொடு துறந்த - கீற்றும் தாருமாகிய குற்றங்களை இருளென்னும் குற்றத்தோடு நீக்கின,
பாசார் மேனி - பசுமை நிறைந்த மெய்யையுடைய, பசுங் கதிர் ஒளியவும் - இளங்கதிரொளி
பரந்த மரகதச் சாதியும் :
ஏகை - இரேகை ; கீற்று. இருள்
- கருகல். மரகதக் குற்றம் எட்டனுள் இவை மூன்றும் மிக்க குற்றமென்க. குற்றம் எட்டினையும்,
"கருகுதல் வெள்ளை கன்மணல் கீற்றுப், பொரிவு தராச மிறுகு தன் மரகதத், தெண்ணிய குற்ற
மிவையென மொழிப" என்பதனானறிக. இனி, மரகதத்தின் குணமும் எட்டென்ப; அவற்றை, "நெய்த்தல்கிளி
மயிற்கழுத் தொத்தல்பைம் பயிரிற், பசுத்தல் பொன்மை தன்னுடன் பசுத்தல், பத்தி பாய்தல்
பொன்வண் டின் வயி, றொத்துத் தெளிதலொ டெட்டுங் குணமே" என்பதனானறிக. |
|