4. ஊர்காண் காதை

190

இருள்தெளித் தனையவும் இருவே றுருவவும்



190
உரை
190

       இருள் தெளித்தனையவும் - இருளைத் தெளியவைத்தா லொத்த நீலமணி வருக்கமும் ;

       "நீலத் தியல்பு நிறுக்குங் காலை, நால்வகை வருணமும் நண்ணுமா கரமும், குணம்பதி னொன்றும் குறையிரு நான்கும், அணிவோர் செயலு மறிந்திசி னோரே" என்பதனால், நீலத்திற்குச் சாதி நான்கும், குணம் பதினொன்றும், குற்றம் எட்டுமெனக் கொள்க.

       இருவேறு உருவவும் - மஞ்சளும் சிவப்பும் கலந்தா லொத்த கோமேதக வருக்கமும் ;

       இருவேறுரு வினையுடையன வயிடூரியம் என்பர் அரும்பதவுரை யாசிரியர்.