4. ஊர்காண் காதை

மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்



12
உரை
12

       மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் - வலிமை அமைந்த போர்த்துறைக்கண்ணே சேறலான் விளக்கமுற்ற அரசனது கோயிலும் ஆகிய இவ்விடங்களில் ;

       இனி, மறத்துறை விளங்குதற்குக் காரணமாகிய மன்னவன் எனலும் பொருந்தும். மறத்துறையாவன வெட்சி முதலிய திணைகளும் அவற்றின் துறைகளுமாம்.

       ஒரு பொருட்குக் கோயில், நியமம், நகரம், கோட்டம், பள்ளி எனப் பல பெயர் வந்தது ஓர் அணியாகும். இதனைப் பரியாயம் என்பர்.