4. ஊர்காண் காதை

15

கோவலன் சென்று கொள்கையி னிருந்த
காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி



15
உரை
16

       கோவலன் சென்று கொள்கையின் இருந்த காவுந்தி ஐயையைக் கை தொழுது ஏத்தி - கோவலன் சென்று தவ வொழுக்கத்தில் இருந்த கவுந்தியடிகளைக் கையால் தொழுது நாவாற் போற்றி ;

       
கொள்கை - தவம் ; ஆவது தியானம். சென்று என்பதனாற் கவுந்தியடிகள் வேறிடத்திருந்தார் என்பதும் கொள்கையின் இருந்த என்பதனால் அவர் தவநிலையில் இருந்தார் என்பதும் பெறப்படும். இனி, கொள்கையின் இருந்த என்பதற்கு இவர்களடையும் துன்பம் அடையாதிருந்த எனலும் பொருந்தும்.