5. அடைக்கலக் காதை


இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவக்


91
உரை
94

      ("இம்மைச் செய்தன .... வினவ") விருத்த கோபால - அறிவால் முதிர்ந்த கோபாலனே, நீ இம்மைச் செய்தன யான் அறி நல்வினை - யான் அறிய இப் பிறப்பின்கண் நீ செய்தன யாவும் நல்வினையே யாகவும், உம்மைப் பயன்கொல் ஒரு தனி உழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது - ஒப்பற்ற தனிமையான் வருந்தி இத் திருவினை ஒத்த மாணிக்கத் தளிருடன் இவண் புகுந்தது முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனேயோ, என வினவ - என்று மாடலன் கேட்க ;

      ஒருதனி உழத்தல் - உசாவின்றி வருந்துதல். மாமணி - முழு மாணிக்கம். கண்ணகியின் இளமை கருதிக் கொழுந்து என்றார். விருத்தன் - ஞான விருத்தன் எனல் மரபு. கோபால - கோவல. கொல் - ஐயம்.

      கோபால நீ இம்மைச் செய்தன நல்வினை உழந்து போந்தது உம்மைப் பயன்கொல் என மாறுக.