|
125
130
|
மாதரி கேளிம் மடந்தைதன்
கணவன்
தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்
இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன் |
|
மாதரி
கேள் - மாதரியே கேட்பாயாக, இம்மடந்தை தன் கணவன் தாதையைக் கேட்கின் தன் குலவாணர்
- இப் பெண்ணின் கணவனுடைய தந்தையின் பெயரைக் கேட்பாராயின் அவன் குலத்துப் பிறந்த
இந் நகரத்து வாழ்வோர், அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர் கொண்டு - பெறுதற்கரிய
செல்வத்தினைப் பெற்றார் போன்று தமது விருந்தினராக எதிர் கொண்டு அழைத்து, கருந்தடங்
கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் - இக் கரிய பெரிய கண்களையுடையாளொடு தமது காவலையுடைய
இல்லத்தின்கண் வைத்துக் கொள்வர், உடைப் பெருஞ் செல்வ மனைப்புகும் அளவும் - அங்ஙனம்
அப் பெருஞ் செல்வ முடையார் இல்லத்தின்கண் புகும் வரையும், இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம்
தந்தேன் - இடையர்குலப் பெண்ணாகிய நினக்கு இவளை அடைக்கலமாகக் கொடுத்தேன் ;
தாதையை - தந்தையின் பெயரை ; என்றது மாசாத்துவான்
மகன் இவன் என்பதனைக் கேட்கின் என்றவாறு. உடைப்பெருஞ் செல்வர் - பெருஞ் செல்வமுடையார்;
உடைய பெரிய செல்வர் எனலுமாம். 1
"உடைப் பெருஞ் செல்வரும்" என்றார் பிறரும். இடைக்குல மடந்தை - முன்னிலையிற் படர்க்கை
வந்த வழுவமைதி. |
1
நாலடி. 368.
|
|