|
135
|
மங்கல மடந்தையை நன்னீ
ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித்
தேமென் கூந்தற் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே யாகித் தாங்கிங்கு |
|
மங்கல
மடைந்தையை நல் நீர் ஆட்டி - அழகிய இக் கண்ணகியைத் தூய நீராற் குளிப்பாட்டி, செங்கயல்
நெடுங்கண் அஞ்சனம் தீட்டி - சிவந்த கயல் போலும் நெடிய கண்களில் மை எழுதி, தே மென்
கூந்தல் சில் மலர் பெய்து - தேன் பொருந்திய மெல்லிய கூந்தற்கண் சிலவாகிய மலர்களைச்
சூடி, தூ மடி உடீஇ - தூய புடைவையை உடுத்து, தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் ஆயிழை
தனக்குத் தாயும் நீயே ஆகித் தாங்கு - ஆராய்ந்த கலன் அணிந்த இவளுக்கு முன்னோர் கூறிய
சிறப்பினை யுடைய தோழிமாரும் காவற் பெண்டும் நற்றாயும் நீயேயாகிக் காப்பாற்றுவாயாக
;
மங்கல நன்னீர் என இயைப்பினு மமையும். தொல்லோர்
சிறப்பின் ஆயம் - பழையோராகச் சிறப்பித்துக் கூறப்பட்ட ஆயம் எனலுமாம். காவல் -
செவிலித் தாயர்.
மடந்தையை ஆட்டித் தீட்டிப் பெய்து உடீஇத்
தாங்கு என்க. |
|