5. அடைக்கலக் காதை

சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு
யாதிவன் வரவென இறையோன் கூறும்


161
உரை
162

      சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது - உலக நோன்பிகள் யாவரும் சாரணரை வணங்கி, ஈங்கு யாது இவன் வரவு என - இவ்விடத்து இத் தேவனுடைய வருகை யாதனைக் கருதியதாகும் என்று கேட்க, இறையோன் கூறும் - சாரணர் தலைவன் கூறுவானாயினன், (கூறுபவன்) ;

      முன்னர்ச் சாரணர் எனப் பன்மை கூறிப் பின்னர் இறையோன் என ஒருமை கூறியது அவர்களுள் தலைவனே மக்களுக்கு அறிவுறுத்துவன அறிவுறுத்துவானாகலின் என்க. முன்னரும், 1 "தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்ற............சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும்" எனக் கூறினமை காண்க.

1 சிலப், 10 ; 163-7.