5. அடைக்கலக் காதை


15
மாதவ முனிவன் மலைவலங் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து

தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண்
வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக்
கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடி வணங்க


14
உரை
19

       தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து - தாழ்ந்த நீரை வேலியாகவுடைய தலைச்செங்காடு என்னும் ஊரிடத்துள்ள, நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை-நான்கு வேதங்களையும் முற்ற உணர்ந்த நன்மையை விரும்பிய கோட்பாட்டினையுடைய, மாமறை முதல்வன் மாடலன் என்போன் - மறையவர் தலைவனாகிய மாடலன் எனப்படுவோன் ;

தாழ்தல் - ஆழமாதல்; தங்குதல் என்றுமாம். தாழ்நீர் - கடல்; கிடங்குமாம்.மாதவ முனிவன் மலை வலங்கொண்டு-மிக்க தவத்தினையுடைய அகத்திய முனிவனுடைய பொதிய மலையை வலங்கொண்டு, குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து - குமரியின் பெரிய துறைக்கண் முறைப்படி நீராடி, தமர்முதற் பெயர்வோன் - தம் கிளைஞர் இருக்குமிடத்திற்கு மீண்டுவருவோன், தாழ் பொழில் ஆங்கண் வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்கக் கவுந்தி இடவயின் புகுந்தோன் தன்னை - வழிச் சென்ற வருத்தத்தான் உண்டாய மிக்க துயரம் ஒழிய நிழல் படிந்த சோலையுள்ள அவ்விடத்துக் கவுந்தியடிகளிருந்த பள்ளியிடத்துப் புக்கவனை, கோவலன் சென்று சேவடி வணங்க - கோவலன் சென்று சேவடிக்கண் தொழ ;

குமரி - யாறு, கடலுமாம்; 1''தொடியோள் பௌவம்'' என்றாராகலின். முதல் - இடம். வகுந்து - வழி. இடவயின் - இடத்தில். துயர் நீங்கப் பொழிலாங்கண் இடவயிற் புகுந்தோன் என்க. புகுந்தான் ; புகுந்தவனை என அறுத்துரைக்க.

1 சிலப். 8 : 1.