5. அடைக்கலக் காதை





25
வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு

நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறூஉந் தகைமொழி கேட்டாங


21
உரை
27

      வேந்து உறு சிறப்பின் விழுச்சீர் எய்திய - அரசன் அளித்த மிக்க தலைவரிசையால் சிறந்த புகழினைப் பெற்ற, மாந்தளிர் மேனி மாதவி மடந்தை - மாந்தளிர் போலும் மேனியையுடைய மாதவியாகிய மடந்தை, பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து - நற்பகுதி வாய்த்தலையுடைய பெண் குழந்தையினைப் பெற்றெடுத்து, வாலாமை நாள் நீங்கிய பின்னர் - தூய்மையின்மையாகிய நாட்கள் கழிந்த பின்னர், மா முது கணிகையர் - ஆண்டில் முதிர்ந்த கணிகை மகளிர், மாதவி மகட்கு நாம நல் உரை நாட்டுதும் என்று - மாதவியின் புதல்விக்கு நல்ல புகழ் அமைந்த பெயரை இடுவோம் என்று, தாம் இன்பு உறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு - தாங்கள் மகிழ்ச்சியுறுதற்குக் காரணமாகிய தகுதி அமைந்த சொல்லினைக்கூறக் கேட்டு அப்பொழுது;

'      வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய' என்றது அரசனால் தலைக்கோல் பெற்று ஆயிரத்து எண்கழஞ்சு பொன் பெற்றதனை. பெரும்புலவோர் ஒரு நிகழ்ச்சியினைக் கூறுங்கால், அந் நிகழ்ச்சியின் மேல் விளைவினையும் ஆண்டே புலப்படுத்தல் இயல்பாகலான், 'பால் வாய்க்குழவி' என்றார் ; பால் - பகுதி ; நல்லூழ்; பால்வாய் என்பது குழவிக்கு இயற்கையடை என்றலுமாம். வாலாமை - புனிறு தீராமை. முதுகணிகையர் - சித்திராபதி முதலியோர். முன்னர்க் குழவி என்ற பொதுமை நீங்க மகட்கு என்றார். நல்லுரை நாமம் என்க. கேட்டான் கோவலன்.