|
55
|
உண்டினி திருந்த உயர்பே ராளற்கு
அம்மென் திரையலோ டடைக்கா யீத்த
மையீ ரோதியை வருகெனப் பொருந்திக்
|
|
உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு - இனிதே உணவுண்டு தங்கிய உயர்ந்த பெருமையுடையோனாகிய
கோவலனுக்கு, அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த - அழகிய மெல்லிய வெற்றிலையோடு
பாக்கினையும் தந்த, மையீர் ஓதியை வருகெனப் பொருந்தி - கரிய குளிர்ந்த கூந்தலையுடை
யாளை வருகவென்று அருகணைத்து ;
ஒருமுறை கழித்து உண்டினிதிருந்த பேராளன்
என முடிக்க. திரையல் - வெற்றிலைச் சுருள். ஓதி - ஆகுபெயர். |
|