|
.
60
|
கல்லதர் அத்தம் கடக்க யாவதும
வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென
வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி
எம்முது குரவர் என்னுற் றனர்கொல
மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ
யானுளங் கலங்கி யாவதும் அறியேன
|
|
கல்லதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தை மெல்லடி என - மடந்தையின்
மெல்லிய அடிகள் பருக்கைக் கற்கள் நிறைந்த நெறியாகிய அருவழியைக் கடப்பதற்குச் சிறிதாவது
வன்மையையுடையனவோ என்று நினைந்து, வெம்முனை அருஞ்சுரம் போந்ததற்கு இரங்கி - வெம்மையையுடைய
மறவர் ஆறலைக்கும் முனைகளையுடைய அரிய சுரத்து நெறியிற் போந்தமைக்கு இரக்கங்கொண்டு,
எம் முது குரவர் என் உற்றனர் கொல் - எம்முடைய இரு முதுகுரவரும் எந் நிலையை அடைந்தனரோ,
மாயங் கொல்லோ - யான் இங்ஙன முற்றது கனவோ, வல்வினை கொல்லோ - நனவாயின் முன்செய்த
தீவினையின் பயனோ, யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் - இப்பொழுது என்னுள்ளங் கலக்கமுறலான்
யான் இவற்றினொன்றினையும் உணர்கின்றிலேன் ;
முனை - மறவர் இருப்புக்கள் ; குறும்புகள். யாவதும்
வல்லுநகொல்லோ என்றது வல்லா என்றவாறு. என்னுற்றனர் கொல் - என்ன துன்பமுற்றாரோ
; இறந்தனரோ. மாயம் - கனவு. யாவதும் - யாதும் ; சிறிதும். |
|