6. கொலைக்களக் காதை



155

காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும்

ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத்
தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த
கோவலன் றன்னைக் குறுகின னாகி


154
உரை
157

          காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும்-அங்ஙனம் அரசன் ஊர் காப்பாளரைத் தன்னோடு ஏவுதலானே கொலைத் தொழிலையுடைய கொல்லனும், ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என - ஏவப்பட்ட உள்ளத்தோடே யான் கருதியதனை முடித்தேன் என்று கருதி, தீவினை முதிர்வலைச் சென்றுபட்டு இருந்த - தீயவினையாகிய சூழ்ந்த வலைக்கண்ணே சென்று அகப் பட்டிருந்த, கோவலன் தன்னைக் குறுகினன் ஆகி - கோவலனை அணுகியவனாய் ;

கருந்தொழில் - கொலைத்தொழில். ஏவல் உள்ளம் - ஏவிய உள்ளம்; துரந்த உள்ளம். முடித்து - முடித்தேன் ; விரைவு பற்றி எதிர் காலம் இறந்த காலமாகக் கூறப்பட்டது. இனி முடிந்தது எனற் பாலது முடித்து என விகாரமாயிற்று எனவுங் கூறுப. முதிர்தல் - சூழ்தல். தீ வினை முதிர்வலை என்பதனை முதிர் தீவினை வலை என மாற்றி, முற்றிய தீவினையாகிய வலை எனலுமமையும். குறுகுதல் - அணுகுதல்.