6. கொலைக்களக் காதை


இரவே பகலே என்றிரண் டில்லை
கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை


188
உரை
189

          இரவே பகலே என்று இரண்டு இல்லை - அவர்க்கு இரவும் பகலும் என்னும் இரண்டு பகுதி இல்லை, கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை - அவர் களவு செய்யும் இடத்தைக் கேட்பின் நாம் ஓடி ஒளிக்கலாம் இடம் வேறு இல்லை

;         எல்லாக் காலமும், எல்லா இடமும் அவர் களவு செய்தற்குப் பொருந்தியனவே என்றவாறாயிற்று.

         இங்ஙனம் களவு நூற்றுறை கூறியோன், கள்வருடைய வன்மையை அவர்க்குணர்த்துவான் பொய்க் கரி ஒன்று கூறுகின்றான் ;