|
|
நேரிசை
வெண்பா
நண்ணும் இருவிளையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகி தன்கோள்வன் காரணத்தான்--மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை.
|
|
"நண்ணு மிருவினையு ..... வந்த வினை." பண்டை விளைவாகி வந்த வினை - பாண்டியன் முன்
செய்த தீங்கினை பயனாகி வந்த தீவினையால், மண்ணில் வளையாத செங்கோல் - இவ் வுலகத்து
வளை யாத அவனுடைய செங்கோல், கண்ணகி தன் கேள்வன் காரணத் தான் வளைந்தது - கண்ணகியின்
கணவனாய கோவலன் முன்னிலை யாக வளைவுற்றது, நண்ணும் இருவினையும் - ஆகலான், நீவிர் செய்த
இரு வினைப் பயனும் நும்மை வந்து பொருந்தும் என்பதனை அறிந்து, நண்ணுமின்கள் நல்லறமே
- உலகத்தீர் நல்வினையைச் செய்யுங்கள்.
பாண்டியன் கோல் வளைதற்கு பழவினை காரணமும்,
கோவலன் வாயிலு மென்றார்.
கொலைக்களக் காதை முற்றிற்று. |
|