உரைபெறு கட்டுரை

4

"அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகு மென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித் தல் விழாவணி நிகழ்வித்தோனே."


4
உரை
4

அது கேட்டு - அதனைக் கேட்டு, சோழன் பெருங்கிள்ளி - பெருங்கிள்ளி யென்னுஞ் சோழன், கோழியகத்து - உறை யூரிடத்தே, எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுள் ஆகும் என - இவள் ஓர் பத்தினிக் கடவுளாதலின் எத்திறத்தானும் நமக்கு வரந்தருமெனக் கருதி, நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து - நங்கைக்குக் கோயிலும் எடுப்பித்து, நித்தல் விழா அணி நிகழ்வித்தோன் - நித்தமாகிய அணி விழாவும் நிகழ்வித்தனன்.

பெருங்கிள்ளி - இவள் பெருநற்கிள்ளி யெனவும் படுவன். கோழி - உறையூர்;' இதனை,

1 ''முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய
புறஞ்சிறை வாரணம்''


என்பதனானறிக. 'எத்திறத்தானு மென்றார்; இவள் பிறந்த உரி மைபற்றி' என்பர் அடியார்க்குநல்லார்.

உரைபெறு கட்டுரை - உரைத்துப் போதுகின்ற கட்டுரை என்பர் அரும்பதவுரையாசிரியர்.


உரைபெறு கட்டுரை முற்றிற்று.


1 சிலப், 10: 247--8.