8. துன்ப மாலை




45

தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக்
கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்
செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப
இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ



42
உரை
45

        தம்முறு பெருங்கணவன் தழல் எரியகம் மூழ்க - தம்மோடுற்ற பெருமை மிக்க கணவன் சுடுகின்ற தீயிடத்தே மூழ்கவும், கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரைப்போல் - தாமும் அத் தீயிடத்தே மூழ்காது பல நீர்த்துறைகளில் படிகின்ற கைம்மை நோன்பு மிக்க வருந்துதலையுடைய மகளிரைப் போன்று, செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ - செம்மையினின்றும் நீங்கிய கோலையுடைய பாண்டியன் தவற்றைச் செய்தலான் இப் பிறவியிலும் புகழை விட்டு நீங்கி வருந்தி ஏக்கமுற்று உள்ளமழிவேனோ;

       கைம்மை கூர் மகளிர் என்க. கவலையமகளிர்-உயவற் பெண்டிர். செம்மை - வளையாமை. இம்மையும் - உம், எச்சவும்மை; என்னை? மறுமையிலும் புண்ணியத்தை ஒரீஇ எனப் பொருள்படலான்.