8. துன்ப மாலை

25

அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே



25
உரை
28

       அரசு உறை கோயில் அணியார் ஞெகிழம் - அரசன் விரும்பித் தங்கும் கோயிற்கணிருந்த அழகு மிக்க சிலம்பினை, கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே - சிறிது அரவமும் இன்றிக் கவர்ந்த கள்வன் இவனேயாமென்று கூறி, குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே - ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த ஊர்காவலர் இவனைக் கொலை செய்தலைக் கருதினர் ;

       அரசு உறை கோயில் என்றது ஈண்டு அந்தப்புரத்தை என்ப. ஞெகிழம் - சிலம்பு. கரைதல் - ஒளித்தல் ; வருந்துதல் எனலும் ஆம். கொலை செய்தனர் எனக் கூறின் இவள் இறந்துபடுவாள் எனக் கருதிக் கொலை குறித்தனர் என்றாள் என்க.