9. ஊர்சூழ் வரி


40
என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள் என்னீர்
பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ
மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு
என்னுறு வினைகாணா இதுவென வுரையாரோ


39
உரை
42

       என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர்- என்னுடைய மிக்க துயரத்தினைக் கண்டு வைத்தும் நம் காதலி யாகிய இவள் இதற்கு இடர் உறுவாள் என எண்ணுகின்றிலீர், பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ - அது நிற்க, மணம் பொருந்திய சந்தன முதலிய பூசப் பட்ட நுமது பொன் போன்ற மேனி புழுதி படிந்து கிடக்கத்தக்கதொன்றோ, மன் உறு துயர் செய்த மறவினை அறியாதேற்கு - மிக்க துயரத்துக் குக் காரணமாய அரசன் செய்த இக் கொலைத் தொழில் எத் தன்மையால் நிகழ்ந்ததென அறியவொண்ணா எனக்கு, என் உறுவினை காண் ஆ இது என உரையாரோ - இக் கொலைத் தொழிற்குக் காரணம் யான் முற்பிறப்பிற் செய்த என் தீவினையே காண் என எனக்கு இந் நாட்டிற் சொல்லார்களோ ;

       நறுமேனி - மணந்தருவன பூசிய மேனி, ஓகாரம் - இரக்கம். உறுதுயர் மன் செய்த மறவினை எனக் கூட்டுக. இனி, உறுதுயர் செய்த மன் மறவினை எனலுமமையும். மறவினை - கொலைத்தொழில், என்னுறு வினை காணா இது என்பதற்கு, இக் கொலை நிகழ்ச்சி என்னை யுற்ற தீவினையின் பயனேகாண் எனவுரைத்தலும் அமையும் ; ஆ, அசை, தான் அயல்நாட்டினளாகலான் இந் நாட்டில் எனக்குச் சொல்லார்களோ என்றாள். இஃது அழுகையைச் சார்ந்த வெகுளி ; மேல்வருவனவும் இன்ன..