|
45 |
யாருமில் மருள்மாலை
இடருறு தமியேன்முன்
தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ
பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப
ஈர்வதோர் வினைகாணா இதுவென வுரையாரோ |
|
யாரும்
இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் - எனக்குத் துணையாக ஒருவருமில்லாத மயக்கத்தினைச்
செய்யும் இம் மாலைக் காலத்தே துயருறுகின்ற தனியேன் கண்முன்ன ரேயே, தார் மலி மணி
மார்பம் தரை மூழ்கிக் கிடப்பதோ - நிறைந்த மலர்மாலைக்குள் முழுகும் நுமது அழகிய மார்பு
வெறு நிலத்தே படிந்து கிடக்கத் தக்க தொன்றோ, பார் மிகு பழிதூற் றப் பாண்டியன் தவறு
இழைப்ப ஈர்வதோர் வினைகாண் ஆ இது வென உரையாரோ - உலகத்தார் மிக்க பழிச்சொல்
கூறித் தூற் றும் வண்ணம் பாண்டியன் தவற்றினைச் செய்ய இந் நிகழ்ந்த நிகழ்ச்சி வெட்டுவிப்பதோர்
நின் தீவினையின் பயன்காண் என ஒருவரும் சொல்லாரோ ;
பாண்டியன் தவறிழைப்ப என்றது ஆராயாமல்
கோவலனைக் கொலை செய்யக் கூறியதனை என்க. ஈர்வது - வெட்டுவது. |
|