|
10 |
மாதர்த் தகைய மடவார்கண்
முன்னரே
காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று |
|
மாதர்த்
தகைய மடவார் கண் முன்னரே - தம் கணவர் காதலிக்குந் தகுதயினையுடைய மகளிர் கண் முன்னரேயே,
காதற் கணவனைக் காண்பனே ஈது ஒன்று - அன்பு நிறைந்த என் கணவனை உயிருடையவனாகக் காண்பேன்
அங்ஙனங் காணும் இஃதோர் புதுமையன்றோ ;
மாதர் - காதல். தகை - ஈண்டுக் கற்பு.
கணவனைக் காண் பேன் என்றது கணவனைப் பண்டுபோல உயிருடையவனாக் காண் பேன் என்றவாறு.
|
|