9. ஊர்சூழ் வரி




75
என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச்
சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன்.


72
உரை
75

       என்றாள் எழுந்தாள் - என்றிங்ஙனங் கூறியவள் ஆண் டுப்போதற்கு எழுந்தாள், இடர் உற்ற தீக் கனா நின்றாள் நினைந் தாள் நெடுங்கயற்கண் நீர் சோர - எழுந்தவள் தன்னூரிற் கண்ட துன்ப மிக்க தீய கனாவினை நீண்ட கயல்போலும் கண் களினின்றும் நீரொழுக நின்று எண்ணினாள், நின்றாள் நினைந் தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் சென்றாள் அரசன் செழுங் கோயில் வாயின்முன் - அங்ஙனம் நின்று நினைந்தவள் நெறி யறிதற்பொருட்டுத் தன் கண்ணீரைத் துடைத்துப் பாண்டிய மன்னனது வளம் மிக்க கோயிலின் வாயிலிடத்தை அடைந்தாள் ;

       தீக்கனாவென்றது முன்னர்த் தான் கண்டு தேவந்தியிடம், 1"கடுக்குமென் நெஞ்சம்" என்பது முதலாகச் சொல்லியவதனை என்க. என்றாள் - எழுவாய் ; சென்றாள் - பயனிலை.

இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

9. ஊர்சூழ் வரி முற்றிற்று.


1 சிலப். 9: 45.