|
|
தீதறு நல்லுரை கேளா
தொழிவேனேல்
நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று |
|
தீது
அறு நல்லுரை கேளாது ஒழிவேனேல் - அங்ஙனம் அவன் கூறும் நல்லுரையைக் கேளாதொழிவேனாயின்,
நோதக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று - இவள் நமக்கு வருந் தத் தக்கன செய்தாளென்று
என்னை இகழுக இது நுங்கட்கோர் வாய்ப்பிடம் ;
நோதக்க செய்தது, 1
"நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்" என்று இகழ்ந்து கூறியது. எள்ளல் என்றது இவள்
கள்வன் மனைவியே என்று இகழுமின் என்றவாறு. எள்ளல் - அல்லீற்று வியங்கோள் ; 2"மக்கட்பதடி
எனல்" என்பதுபோல.
|
1
சிலப், 16 : 4. 2 குறள். 166
|
|