9. ஊர்சூழ் வரி


15
நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று
அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி
மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக்
களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்


14
உரை
18

       என்று அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு ஏங்கி மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி - என்று கூறி வருத்தமுற்றுப் பொறாது அழுகின்றாளை வளமிக்க மதுரை நகரத்தார் யாவரும் கண்டு ஏக்கமுற்றுக் கலங்கி, களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இது என் கொல் - நீக்க வொண்ணாத துன்பத்தினை இக்

       காரிகைக்குச் செய்து எஞ்ஞான்றும் கோடாத செங்கோல் கோடிற்று இது யாது காரணத்தால் நிகழ்ந்ததோ ;

       அயல் நாடு போந்து தீதிலாக் கணவனை இழந்து தனித் துயருழத் தல் பற்றி மதுரையாரெல்லாரும் மயங்கினார் என்க, 1"அல்லற் பட் டாற்றா தழுதகண் ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை" என்னும் குறளின் கருத்து ஈண்டு அறிதற் குரியது. 2 "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்" ஆகலான், களையாத் துன்பம் என்றார

1 குறள், 555. 2 சிலப். 20: 81.