|
20 |
மன்னவர் மன்னன் மதிக்குடை
வாள்வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல |
|
மன்னவர்
மன்னன் மதிக்குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என் கொல் - அரசர்க்
கரசனும் திங்களை ஒத்த குடையினையும் வாளினையும் உடைய வேந்தனும் ஆகிய பாண்டியனது அரசியல்
அழிவுற்றது இது யாது காரணத்தானிகழ்ந்ததோ :
குடையையும் வாளையுமுடைய வேந்தன் என்க.
குடையும் வாளுங் கூறவே அளியுந் தெறலும் பெறப்பட்டன. கொற்றம் - அரசியல். |
|