|
|
செம்பொற் சிலம்பொன்று
கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல |
|
செம்பொற்
சிலம்பு ஒன்று கை ஏந்தி நம் பொருட் டால் வம்பப் பெருந்தெய்வம் வந்தது இது என் கொல்
- செம் பொன்னாலாகிய ஓர் சிலம்பினைத் தனது கையின்கண் ஏந்தி நம்மைக் கெடுத்தற்பொருட்டுப்
புதிய பெரிய தெய்வம் வந்துற்றது இதனால் மேல் விளைவது யாதோ ;
நம்பொருட்டு - நம்மை நன்னெறிப்படுத்தும்
பொருட்டு எனலு மாம். பெருந்தெய்வம் என்றது, முன்னர், 1"கற்புக்
கடம் பூண்ட இத்தெய்வ மல்லது, பொற்புடைத் தெய்வம் யாம்கண் டில மால்" எனக் கூறினமையானென்க.
|
1
சிலப் 15: 143-4.
|
|