9. ஊர்சூழ் வரி

25
ஐயரி யுண்கண் அழுதேங்கி யாற்றுவாள்
தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல்


25
உரை
26

       ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் தெய்வ முற்றாள் போலுந் தகையள் இதுவென் கொல் - புலம்பி ஏக் குற்று அரற்றுவாளாய அழகிய அரி பரந்தமை பூசிய கணணினை யுடையாள் தெய்வத் தன்மையுற்றாள் போலுந் தகுதியை யுடையளாயினாள் இதனால் மேல் விளைவது யாதோ ;

       ஐ - வியப்புமாம். உண்கண் - மை பூசிய கண். அரற்றுவாள் உண்கண் என மாறுக. தெய்வமுற்றாள் - தெய்வமேறினாள் எனலு மாம்.