|
|
வாயில் வந்து கோயில்
காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்எனத |
|
வாயில்
வந்து கோயில் காட்ட-வாயிலோன் கண்ணகியிடம் வந்து அவளை அழைத்துச் சென்று கோயிற்கண்
மன்னனைக் காட்ட, கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி - கோயிற்கண் அரசனை அணுகிச்
சென்று நின்றவிடத்து, நீர் வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடியோய்
என - அரசன், நீரொழுகும் கண்களையுடையையாய் எம் முன்னர் வந்து நின்றோய் இளங்கொடி
போல்வாய் நீ யார் என்று கேட்ப ;
|
வாயில்
- ஆகுபெயர். குறுகினள், முற்றெச்சம். உழி, காலப்பொருள் தந்து நின்றது. யாரை - ஐ,
இடைச்சொல்.
|
|