10. வழக்குரை காதை





20



நரைவிரைஇய நறுங்கூந்தலர்
    உரைவிரைஇய பலர்வாழ்த்திட
ஈண்டுநீர் வையங்காக்கும்
    பாண்டியன்பெருந் தேவிவாழ்கென
ஆயமுங் காவலுஞ்சென்
    றடியீடு பரசியேத்தக்

கோப்பெருந் தேவிசென்றுதன்
    தீக்கனாத் திறமுரைப்ப

18
உரை
21

      நரை விரைஇய நறுங் கூந்தலர் உரை விரைஇய பலர் வாழ்த்திட ஈண்டு நீர் வையங் காக்கும் பாண்டியன் பெருந்தேவி வாழ்கென - நரை கலந்த நல்ல கூந்தலையுடைய முதுமகளிர
      பலர் கடல் சூழ்ந்த இவ் வுலகத்தினைப் புரக்கும் பாண்டிய னுடைய பெருந்தேவி நீடு வாழ்கவெனச் சொல்லிப் புகழ் கலந்த மொழிகளான் வாழ்த்தவும், ஆயமும் காவலும் சென்று அடியீடு பரசி ஏத்த - சேவிக்குந் தோழியரும் காவல் மகளிரும் பின் சென்று அடியிடுந்தோறும் புகழ்ந்து போற்றவும், கோப்பெருந்தேவி சென்று தன் தீக்கனாத் திறம் உரைப்ப - பாண்டியன் பெருந்தேவி அரசனிடத்துச் சென்று தான் கண்ட தீய கனாவின் தன்மையை எடுத்துச் சொல்ல ;

      பின்னர்க் கூறிய விரைஇய, பலவின்பாற் பெயர் ; மூன்றனுருபு விரிக்க. ஈண்டு நீர் - கடல். கோப்பெருந்தேவி - பெயர். திறம் - வகையுமாம். நறுங்கூந்தலர் பலர் தேவி வாழ்கென வாழ்த்திட ஆயமுங் காவலும் ஏத்தச் சென்று உரைப்ப என மாறியுரைக்க.