11. வஞ்சினமாலை

15 பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி
மணல்மலிபூங் கானல் வருகலன்கள் நோக்கிக்
கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய


15
உரை
17

மன்னி மணல் மலி பூங் கானல் வரு கலன்கள் நோக்கி - மணல் நிறைந்த பொலிவு பெற்ற கடற்கரைச் சோலையிடத்தே தங்கிக் கடலினின்றும் கரைக்கு வரும் மரக்கலங்களை நோக்கி இருந்து, கணவன் வரக் கல்லுருவம் நீத்தாள் - தன் கணவன

கலத்தினின்றும் வந்த அளவில் தன் கல் வடிவத்தினை ஒழித்தாளும் ;

பூங்கானல் மன்னி என்க. கானல் - கடற்கரைச் சாலை. கடல் கடந்து பொருளீட்டற் பொருட்டுப் போயின தன் கணவன் வரும் வரை ஒருத்தி கல்வடிவா யிருந்தனள் என்க.