11. வஞ்சினமாலை

கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய
மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்

17
உரை
19

       இணையாய மாற்றாள் குழவி விழத் தன் குழவியும் கிணற்று வீழ்த்து ஏற்றுக் கொண்டு எடுத்த வேற் கண்ணாள் - தன்னோடொத்த மாற்றாளுடைய குழவி கிணற்றின்கண் வீழ்ந்ததனால் அது குறித்து உலகோர் தன்மீது பழி சுமத்தாமைப் பொருட்டுத் தன்னுடைய குழவியையும் கிணற்றின்கண் தள்ளி அவ்விரு குழந்தை களையும் அக் கிணற்றினின்றும் எடுத்த வேல் போலுங் கண்களையுடையாளும் ;

        மாற்றாள் - தன் கணவனுக்கு வாய்த்த மற்றொரு மனைவி ; கற்பின் பெருமையால் இரு குழவியையும் ஊறின்றி யெடுத்தாளென்க.