11. வஞ்சினமாலை



20
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்
நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாண்முகத்தைத்
தானோர் குரக்குமுக மாகென்று போன
கொழுநன் வரவே குரக்குமுக நீத்த
பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய


19
உரை
23

வேற்றொருவன் நீள் நோக்கங் கண்டு - அயலானொருவன் தன்னைத் தொடர்ந்து பார்க்கும் பார்வையினை அறிந்து, நிறைமதி வாண் முகத்தைத் தான் ஓர் குரக்கு முகம் ஆகென்று - தனது கலை நிறைந்த திங்கள்போலும் ஒள்ளிய முகத்தினை ஓர் குரங்கின் முகமாகக் கடவதென்று அங்ஙனமாக்கியிருந்து, போன கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த பழுமணி அல்குற் பூம் பாவை - வெளிச் சென்றிருந்த தன் கணவன் வந்தவளவிலே அக் குரங்கின் முகத்தினை ஒழித்த சிவந்த மணிகள் பதித்த மேகலை அணிந்த அல்குலினையுடைய பொலிவுற்ற பாவைபோல்வாளும் ;

நீள்நோக்கம் - விடாமற் பார்த்தல். பழுமணி - பழுத்த மணி ; சிவந்த மணி.