11. வஞ்சினமாலை



40
நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்

வானக் கடவுளரும் மாதவருங் கேட்டீமின

39
உரை
40

நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின் - மதுரை நகரத்துள்ள பெண்டிரும் ஆடவரும் தேவர்களும் மிக்க தவமுடைய முனிவர்களும் யான் கூறுவதனைக் கேண்மின் ;

நான்கு மாடங்கள் கூடினமையால் மதுரை நான் மாடக் கூடலாயிற்று. நான்கு மாடங்களாவன : திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர். வானக் கடவுளர் என்பதற்குச் சுடரொடு திரிதரும் தேவ முனிவர்கள் எனக் கூறலும் அமையும். கேட்டீமின் :வினைத்திரிசொல்.