|
|
ஏவல் தெய்வத் தெரிமுகம்
திறந்தது
காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன |
|
ஏவல்
தெய்வத்து எரிமுகம் திறந்தது - கண்ணகியின் ஏவல் பெற்ற தீக்கடவுளின் எரியின் கூறு
வெளிப்பட்டது, காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன - நகர் காக்குந் தெய் வங்கள் கோட்டை
வாயில்களைக் காவாதொழிந்தன ;
"பண்டேயோர் ஏவலுடையேன்" என வஞ்சின
மாலையுள் அங்கி வானவன் கூறுதலின் ஈண்டு ஏவல் என்றது அதனையும் குறிக்கும். காவற்றெய்வம்
- இந்திரன், இயமன், வருணன், சோமன் என்னும் நான்கு தெய்வங்களுமாம் ; இதனை, 1
"நாற்பெருந் தெய்வத்து நன்னகர்" என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையானறிக
; வருணப் பூதங்கள் பின் கூறப்படுதலின் ஈண்டுக் கூறியன அவை அல்லன என்க. வாயிலை யடைத்தனவெனவே
தமது காவற்றொழிலை விடுத்துப்போயின வென்பதாயிற்று.
|
1
முருகு. 160.
|
|