|
135
|
வருவிருந் தோம்பி மனையற
முட்டாப்
பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி
இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கைப் பூசல் கொடிதோ வன்றெனப்
பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர் |
|
வரு
விருந்து ஓம்பி மனைஅறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி - தம்
இல்லத்து வரும் விருந்தின ரைப் பேணி இல்லற நெறியின் வழுவாத பெரிய மனையறத்திற்குரிய
மகளிர் மிக மகிழ்ச்சியுற்று, இலங்கு பூண் மார்பிற் கணவனை இழந்து - விளங்கும் பூணணிந்த
மார்பினையுடைய தன் கொழுநனை இழந்து, சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல்
கொடிதோ அன்று என - சிலம்பானே பாண்டிய மன்னனை வெற்றி கொண்ட செவ்விய அணிகலங்
களையுடைய மங்கை தன் கொங்கையாற் செய்த பூசல் கொடி தன்று எனக் கூறி, பொங்கு எரி
வானவன் தொழுதனர் ஏத் தினர் - மிக்கு எரியும் தீக் கடவுளை வணங்கித் துதித்தனர் ;
1"இருந்தோம்பி
இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி, வேளாண்மை செய்தற் பொருட்டு" ஆகலான் வருவிருந்தோம்பி
மனையற முட்டாப் பெருமனைக் கிழத்தியர் என்றார். கொடிதன்று - முறையே யென்றபடி. மைத்தடங்
கண்ணார் மயங்கக் குழலியர் மகளிரொடு போத மனைக் கிழத்தியர் ஏத்தினர் என்க ; ஏத்தினராக
வும் என விரித்து எச்சப்படுத்தலுமாம்.
|
1
குறள். 81.
|
|