12. அழற்படு காதை






155
காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து
மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும்
இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்

ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்
கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுரா பதியென்.


151
உரை
157

       காதலற் கெடுத்த நோயொடு உளம் கனன்று - தன் கணவனைக் காணப் பெறாத துன்பத்தோடே உள்ளங்கொதித்து, ஊது உலைக் குருகின் உயிர்த்தனள் - கொல்லன் உலைக் களத்து ஊதும் துருத்தி போலச் சுடுமூச்செறிந்தனள், உயிர்த்து மறுகிடை மறுகும் கவலையிற் கவலும் - அங்ஙனம் வெய் துயிர்த்து வீதியிற் சுழன்று திரியும், குறுந்தெருக்களிற் கவலை யுடன், நிற்கும், இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் - பல வழியும் இயங்குதலுஞ் செய்யும், மயங்கி நிற்றலுஞ் செய்யும், ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் - இங்ஙனம் பொறுத் தற்கரிய துன்பமுற்ற சீறிய கற்புடையாள் முன்னர், கொந்து அழல் வெம்மைக் கூர் எரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுராபதியென் - திரண்ட அழலாகிய வெம்மை மிக்க எரி யினைப் பொறளாய் மதுராபதி என்னும் தேவதை வந்து தோன்றினாள் என்க.

       உள்ளுடல் கொதித்து வெவ்விதாக வரும் பெருமூச்சுக்கு ஊது லைக் குருகின் காற்று உவமம் ; 1"ஊதுலைக் குருகி னுயிர்த்தகக் தடங் காது" என்பது காண்க. மறுகிடை மறுகும் கவலையிற் கவலும் என்று கூறியதனையே பின்னர்க் கூறி அங்ஙனஞ் செய்யும் வீரபத் தினிமுன் மதுராபதி தோன்றினள் என்றார். இயங்கும் மயங்கும் என்பன முற்று ; பெயரெச்ச அடுக்காக்கி வீரபத்தினி என்பதுடன் முடித்தலுமாம். இயங்கலு மியங்கும், மயங்கலு மயங்கும் என்பன, 2'சுழலலுஞ் சுழலும்' என்பதுபோல் நின்றன. அரசன் தேவி தன் னுடன் துஞ்சியதறியாது உரை அவிந்திருப்ப, மிடைகொள்ள நாற்பாற் பூதமும் பெயர எரி மண்ட அடைந்தன ; பெயர்ந்தன ; மயங்க, போத, ஏத்தினர் ; நாடக மடந்தையர் இழந்து என்ன, மடிந்த மா நகர்க்கண் கனன்று உயிர்த்து மறுகும் ; கவலும் ; இயங்கும் ; மயங்கும் ; அங்ஙனம் அஞருற்ற வீரபத்தினிமுன் மதுராபதி வந்து தோன்றினள் என வினை முடிக்க.


1 மணி. 2; 43.