|
|
வெண்பா
மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த
கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள் -- நாம
முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள்
மதுரா பதியென்னு மாது.
(மாமகளு . . . . . . மாது) மாமகளும் - இலக்குமியும், நாமகளும் - கலைமகளும், மா மயிடன்
செற்று உகந்த கோமகளும்தாம் - |
|
பெரிய
மயிடன் என்னும் அவுணனைக் கொன்று மகிழ்ந்த கொற்றவை யும் ஆகிய மூவரும், படைத்த கொற்றத்தாள்-படைத்த
வெற்றியினை யுடையாளும், நாம முதிரா முலை குறைத்தாள் - முன்னரே அச்சத்தைச் செய்யும்
இளைய முலையைப் பறித்தாளுமாகிய வீரபத்தினியின் எதிரே, வந்தாள் மதுராபதி என்னும்
மாது - மதுராபதி என்னுந் தேவதை வந்து தோன்றினாள்.
மகிஷன்
என்னும் வடசொல் மயிடன் எனத் திரிந்தது ; எருமை உருவினன் என்பது பொருள். கொற்றமாவன
நல்லோரைக் காத்தலும், அரசனை வழக்கில் வேறலும், தீயோரை அழித்தலும் என முறையே கொள்க.
12. அழற்படு காதை முற்றிற்று. |
|