13. கட்டுரை காதை

95 தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து
முத்தப் பூணூல் அத்தகு புனைகலம்
கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத்
தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன்

95
உரை
98

      தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து - மறையினைத் தன்னோடொப்ப ஓதிய தக்கிணாமூர்த்தியாகிய சிறுவனைப் பராசரன் வியந்து பாராட்டி, முத்தப் பூணூல் - அழகிய பூணூலையும், அத் தகு புனைகலம் - அத் தகுதி வாய்ந்த புனையும் அணிகலங்களையும,் கடகம் தோட்டொடு கையுறை ஈத்து - கைவளையும் தோடுமாகிய இவற்றுடனே பரிசிலாகக் கொடுத்து, தன் பதிப்பெயர்ந்தனன் ஆக - தன்னகரத்து மீண்டானாக ;
வலவைப் பார்ப்பானாகலான் மிக்கோன் என்றார். முத்தப பூணூல் - முத்துவடமாகிய பூணூல் எனவும், அத்தகு - அழகு பொருந்திய எனவும் கூறலுமாம். கையுறை - காணிக்கை ; ஈண்டுப் பரிசில்.