நன்
கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅராகி -
அத் தக்கிணாமூர்த்தி நல்ல அணிகலங்கள் புனைபவற்றையும்
பூண்பவற்றையும் பொறாதவர்களாய், வார்த்திகன் தன்னைக்
காத்தனர் ஓம்பி - வார்த்திகனைக் காவல் செய்து பற்றி, கோத்
தொழில் இளையவர் கோ முறை அன்றிப் படுபொருள் வௌவிய
பார்ப்பான் இவன் என - அரசனேவல் செய்யும் காவலர் அரச
நீதியில்லாது புதையலைக் கவர்ந்த பார்ப்பான் இவனென்று கூறி,
இடுசிறைக் கோட்டத்து இட்டனராக - கள்வரை இடும் சிறைக்
கண்ணே இவனை இட்டு அடைத்தனராக ;
புனைபவும் பூண்பவும் வெவ்வேறு வகையின. கொத்தொழி லிளையவர் பொறாராகிக் காத்தனரோம்பி
இட்டனராக வெனக் கூட்டுக. கோமுறையன்றி வௌவிய பார்ப்பான் என்க. படு பொருள் -
களவுப் பொருள் எனலுமாம். 1"உறுபொருளு முல்கு
பொருளுந்தன் னொன்னார்த், தெறுபொருளும் வேந்தன் பொருள்" ஆகலான் படுபொருள் வௌவுதல்
குற்றமாயிற்று.
1
குறள். 756.
|