நீர்த்து
அன்று இதுவென நெடுமொழி கூறி - இச்செயல் நீர்மையுடைத்தன்று என்று வார்த்திகனைப்
புகழ்ந்து கூறி, அறியா மாக்களின் முறை நிலை திரிந்த - அறிவில்லாத காவலரால் முறை
செய்யும் நிலையினின்றும் வேறுபட்ட, என் இறை முறை பிழைத்தது - என்னுடைய அரச நீதி
தவறுற்றது, பொறுத்தல் நும் கடன் என - அதனைப் பொறுத்தல் நுமது கடமையாகும் என்று கூறி,
தடம் புனற் கழனித் தங்கால் தன்னுடன் - பெரிய நீர் சூழ்ந்த வயல்களையுடைய திருத்தங்கால்
என்னும் ஊருடனே, மடங்கா விளையுள் வயலூர் நல்கி - குறைவுபடாத விளைவினையுடைய வயலூரையும்
கொடுத்து, கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு
நல்கி - கார்த்திகையின் கணவனாகிய வார்த்திகன் முன்பு பெரிய பார் மடந்தைக்குத்
தனது அழகிய மார்பினை அளித்து, அவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே - அந்
நிலமடந்தையின் நீங்காத விருப்பத்தினையும் சிறிதளவு தணித்தனன் ;
நீர்த்தன்றிதுவென வென்றது தன் உட்கோளாகக்
கொள்க. இனி, இளையவர், வார்த்திகன் ஆகிய இவரிடைக் கூறினானெனக் கோடலு மிழுக்காது.
நெடுமொழி - புகழ்மொழி. வயலூர் என்பது பெயர். அவனைப் பணிந்தென்பார் இருநில மடந்தைக்குத்
திரு மார்பு நல்கி என்றார் ; இது பரியாயவணி. அரசனை நில மடந்தை கேள்வனாகிய திருமாலெனக்
கொண்டு திருமார்பு நல்கி என்றார். அவன் பிறரைப் பணியாமையின் அவன் மார்பு எஞ்ஞான்றும்
நிலத்திற் பொருந்தியதின் றென்பதனை அவள் தணியா வேட்கை என்பதனாற் பெற வைத்தார்.
|