13. கட்டுரை காதை



135

ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே

133
உரை
137

      ஆடித் திங்கள் பேர்இருட் பக்கத்து அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து - ஆடித்திங்களின் கிருட்டின பக்கத்து அட்டமியும் கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று, ஒள் எரி உண்ண - விளக்க மமைந்த தீக் கதுவலானே, உரை சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் உரையும் உண்டே நிரைதொடியோயே - புகழ் மிக்க மதுரைநகரத்தோடே அரசன் கேடெய்துவான் என்னும் சொல்லும் உண்டாயிற்று நிரைத்த தொடியினையுடையாய் ;
அழல் - கார்த்திகை நாள். குட்டம் - குறைந்தது ; குறைந்த சீருள்ள அடியைக் குட்டமென்பதும் அறிக. 1"ஆடிய லழற்குட்டத்து" என்புழி அழற்குட்டம் என்பது கார்த்திகையின் முதற்காலை யுணர்த்திற்று. ஈண்டு அதன்முதற் காலையோ அன்றி ஒழிந்த மூன்று காலையுமோ உணர்த்தியதாகல் வேண்டும். அதனால் திங்கள் மேடம் அல்லது இடபத்தில் இருத்தல் பெற்றாம். உரை - அறிவர் மொழி ; சோதிடச் சொல்லுமாம். நிரை தொடியோயே உரையுமுண்டே என்க.


1 புறம். 228.