எம்
உறு துயரம் செய்தோர் யாவதும் தம்முறு துயரம் இற்று ஆகுக என்றே - எமக்கு இம் மிக்க
துன்பத்தினைச் செய்தவர் எவ்வகையானும் இத் தகைய துன்பம் தம்மை அடையப் பெறுவார்களாக
என்று, விழுவோள் இட்ட வழுவில் சாபம் பட்டனிர் - விழுகின்றவள் இட்ட தவறுதலில்லாத
சாபத்தினைப் பெற்றீர்கள் ;
செய்தோர் என்ற எழுவாய்க்குப் பயனிலையாகப்
படுவாராக என ஒருசொல் வருவிக்க. இச் சாப வரலாறு மணிமேகலைக்குக் கண்ணகி கூறியதாகச்
1 சாத்தனாராலும் கூறப்பெற்றுள்ளது.
நீலியென்போள் முறையோவெனப் பூசலிட்டு
வாழ்த்திக் கூடுபு நின்றோள் ஆகுகவென்றே விழுவோள் என்க,.
ஆதலிற்
கட்டுரை கேள் நீ - ஆதலால் யான் கூறும் பொருள் பொதிந்த உரையினை நீ கேட்பாயாக
;
1
மணி 26 : 5-34.
|