இரவும்
பகலும் மயங்கினள் கையற்று உரவு நீர் வையை ஒருகரைக் கொண்டு - இரவு இது பகல் இஃதென்று
பகுத்தறியாது செயலற்று மயங்கி ஒலிக்கும் நீர் நிறைந்த வையை யாற்றின் ஒருகரையில்
செல்லலுற்று, ஆங்கு அவல என்னாள் அவலித்து இழிதலின் - அப்போது பதறி இறங்கலாற்
பள்ளங்கள் என்று பாராள், மிசைய என்னாள் மிசைவைத்து ஏறலின் - தன் கணவனிடத்து
உள்ளம் வைத்து ஏறலானே மேடுகள் என்று பார்க்கிலள், கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு
பிளந்து - கடலின் நடுவிடத்தைக் கிழித்துக் கிரவுஞ்சம் என்னும் மலையின் நெஞ்சினைப்
பிளந்து, ஆங்கு அவுணரைக் கடந்த சுடர் இலை நெடுவேல் - அவ்விடத்தே அசுரரை வென்ற ஒளி
விடும் தகட்டு வடிவாய நீண்ட வேலினையுடைய, நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறி - முருகனது
குன்றத்து அடிவைத்து நடந்து உயரச் சென்று ;
அவல, மிசைய பலவின்பாற் பெயர் ; பள்ளமும் மேடுமாய நெறிகள். என்னாள் என்ற இரண்டும்
முற்றெச்சம். வயிறு - நடுவிடம் ; 1 "கடல்வண்ணன்
பண்டொருநாட் கடல்வயிறு கலக்கினையே" என்பதூஉம் காண்க. நெடுவேள் குன்ற மென்பதற்கு
அரும்பதவுரை யாசிரியர் திருச் செங்கோடு எனவுரைப்பர். அடியார்க்கு நல்லார் இதனை
மறுத்து, திருச்செங்குன்று எனவுரைத்தார் ; 2
பதிகத்துக் 'குன்றக் குறவர்' என்பதன் உரை காண்க. அடி வைத்து ஏறி என்றார், அதற்கு
முன்பு வருத்தத்தாற் கால் நிலத்துப் பாவாமையால்.
1
சிலப். 17: முன்னிலைப் பரவல்.
2 சிலப்பதி: 3.
|