13. கட்டுரை காதை


               வெண்பா

தெய்வந் தொழுஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்--தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
விண்ணகமா தர்க்கு விருந்து.

உரை


"தெய்வந் தொழாஅள்.......விருந்து" மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி - இவ் வுலகத்துக் கற்புடை மகளிர்க்கு அழகு செய்வாளாய கண்ணகி, தெய்வமாய் விண்ணக மாதர்க்கு விருந்து - தெய்வமாகி வானின்கண் அரமகளிர்க்கு விருந்தாயினாள், தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - ஆகலான் வேறு தெய்வத்தை வணங்காளாய்த் தன் கணவனை வணங்குவாளைத் தெய்வமும் வணங்குந் தன்மை உறுதி யுடைத்தாம். விருந்தாயினாள் என விரக்க. 1 "தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாள்" என்னும் குறளின் கருத்து இதில் அமைந்துள்ளமை காண்க. ஆல், அசை. கட்டுரை காதை முற்றிற்று.


1. குறள். 55.