|
|
தோழிநீ ஈதொன்று
கேட்டியென் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை |
|
தோழி
நீ ஈது ஒன்று கேட்டி எம் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை - தோழி நீ எம் மன்னனாகிய
பாண்டியனுக்குப் பழவினை வந்தெய்திய வகையாகிய இஃதொரு பொருளைக் கேட்பாயாக ;
ஈது,
சுட்டு நீண்டது. "எங்கோமகற், கூழ்வினை வந்தக் கடை" என்பதனை, 1"வினைவிளை
கால மாதலின் யாவதுஞ், சினையலர் வேம்பன் தேரா னாகி" என முன்னர் வந்தமையானும் அறிக.
வந்தக்கடை - வந்தபடி ; ககரம் விரித்தல் விகாரம் ; வினையெச்சமாகக்கொண்டு, வந்தவிடத்து
அதனாலெய்திய துன்பமாகிய ஈதொன்றை என்றுரைத்தலுமாம்.
1 சிலப். 16 : 148--9.
|
|